அவளைப் பார்த்தேன் - அகரம் மறந்தேன்
அவள் குரல் சேர்ந்தேன் - அது பனை மரத்தேன்
காற்குழலோள் சலங்கை ஒலி
போர்வாளின் வலக்கை ஒலி
குடை பழகிய அவள்
நடை பழகிய நிழல்
குழந்தை மிதித்த கோலம் - அவள்
நிலாப்பெண் நிமித்த வெட்கம்
பெருமை சேர்க்கும் பெண்மை - அவள்
கருமை வார்க்கும் கண்மை
உளறல் கூட உருவகமே - இங்கு
கிறுக்கல் கூட கவிதையே!