Wednesday, September 25, 2013

குழந்தை மிதித்த கோலம்

அவளைப் பார்த்தேன் - அகரம் மறந்தேன்
அவள் குரல் சேர்ந்தேன் - அது பனை மரத்தேன் 

காற்குழலோள்  சலங்கை ஒலி 
போர்வாளின் வலக்கை ஒலி 

குடை பழகிய அவள் 
நடை பழகிய  நிழல் 



குழந்தை மிதித்த கோலம் - அவள் 
நிலாப்பெண் நிமித்த வெட்கம்

பெருமை சேர்க்கும் பெண்மை - அவள் 
கருமை வார்க்கும் கண்மை

உளறல் கூட உருவகமே - இங்கு 
கிறுக்கல் கூட கவிதையே!


No comments:

Post a Comment